கொரியாவின் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில்

Monday, March 7th, 2016

கொரியாவின் தயாரிக்கப்படும் கியா மற்றும் ஹையுண்டாய் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச வர்த்தக விவகார பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜேர்மனியின் வேக்ஸ்வேகன் நிறுவனம் மிக விரைவில் தனது தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவ உள்ளது.

புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதார கொள்கைகள் காரணமாக உலகில் பிரபலமான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு  முதலீடுகளுக்காக வரவுள்ளனர்.

இதன் மூலம் நாடு வேகமாக அபிவிருத்தியடையும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்

Related posts:

வடக்கு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!
பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம் – குடிவரவு - குடியகல்வு திணை...
போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...