கூட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மீண்டும் தடை!
Sunday, July 3rd, 2016
கொக்கிளாய் கடல் நீரேரியில் தடைசெய்யபட்ட கூட்டு வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்தியமையைத் தொடர்ந்து இத் தொழிலுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பகுதி மீனவரின் கோரிக்கையைத் தொடர்ந்து கொக்கிளாய் கடல் நீரேரியில் தடைசெய்யப்பட்டிருந்த கூட்டு வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்வதற்குப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருந்தார்.
பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப் புத் தெரிவித்த தமிழ் மீனவர்கள் முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்பாகப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்து விளக்கி யதை அடுத்து இத் தொழிலுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|