குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம்!
Saturday, December 31st, 2016
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குருநாகல் நாரம்மலைஇ குளியாபிட்டிஇ வாரியபொல ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
562 குடும்பங்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 23 ஆயிரத்து 400 பேர் மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் மூவாயிரத்து 800 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Related posts:
நாட்டில் பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகம்!
சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் - நீதி அமைச்சர் தெ...
இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
|
|
|


