குடாநாட்டில் 741.615 ஹெக்டேயரில் புகையிலைச் செய்கை!

Monday, February 20th, 2017

குடாநாட்டில் 741.615 ஹெக்டேயரில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விவசாயப்பணி ப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்தில்  உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும்  741.615 ஹெக்டேயரில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் காலங்களில் புகையிலை செய்கையை தடைசெய்வதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் குறுகிய கால த்தில்  அதிக  வருவாய் ஈட்டுவதால் மக்கள் தொடர்ச்சியாக புகையிலை செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில்  104.69 ஹெக்டேயரிலும், வேலணையில் 92.85 ஹெக்டேயரிலும், நல்லூரில் 11.5 ஹெக்டேயரிலும், சங்கானையில் 25.1 ஹெக்டேயரிலும், சண்டிலிப்பாயில் 2.675 ஹெக்டேயரிலும், உடுவிலில் 102.5 ஹெக்டேயரிலும், தெல்லிப்பளையில் 3.75 ஹெக்டேயரிலும், கோப்பாயில் 35.7 ஹெக்டேயரிலும், கரவெட்டியில் 299.275 ஹெக்டே யரிலும், பருத்தித்துறையில் 39.425 ஹெக்டேயரிலும், சவாகச்சேரியில் 24.15 ஹெக்டேயரிலும் என மொத்தமாக 741.615 ஹெக்டேயர் நிலப்பரப்பில் புகையிலை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

pok

Related posts:

அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ...
அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை - உள்நாட்டலுவல்கள் இராஜாங...