குடாநாட்டில் மீன்பிடி உற்பத்தி அதிகரிப்பு!
Saturday, January 14th, 2017
யாழ்.மாவட்டம் மீன்பிடி உற்பத்தியில் மீண்டும் முன்னெற்றப்போக்கில் செல்லத் தொடங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடி உற்பத்தி 2016ஆம் ஆண்டு 29 மெற்றிக்தொன்னில் அதிகரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தின் மொத்த மீன்பிடி உற்பத்தி 1983 ஆம் ஆண்டு 48,677 மெற்றிக்தொன்னாகக் காணப்பட்டது. இதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி உற்பத்தி குறைவடைந்து வந்தது.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீன்பிடி உற்பத்தி அதிகரித்து வந்தது. 2014ஆம் ஆண்டு 31,767 மெற்றிக்தொன் மீன் உற்பத்தி காணப்பட்டது. 2015ஆம் ஆண்டு 31,447.5 மெற்றிக்தொன்னாகக் குறைவடைந்திருந்தது. அந்த நிலையில் 2016ஆம் ஆண்டு மீண்டும் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. 29 மெற்றிக்தொன்னால் அதிகரித்து 31,476 மெற்றிக் தொன்னாகப் பதிவாகியுள்ளது.

Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீள் சுழற்சிக்கான கழிவகற்றல் நடவடிக்கை மீண்டும் ஆரம்ப...
பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகம் - கல்வி அமைச்சர் சுசில் பிரே...
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதா – சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ...
|
|
|


