கீரிமலை நீர்த்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு!

Monday, March 13th, 2017

கீரிமலையில் வீடமைப்பு திட்டத்திலுள்ள சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கபுரம் நீர்த்திட்டத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

60 ஆயிரம் லீற்றர் நீர் கொள்ளளவை கொண்ட இந்த நீர்த்தாங்கியிலிருந்து 50 குடும்பங்களுக்கு சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதற்கான வசதியும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட சேமநல விற்பனை மற்றும் நெடுந்தீவில் அமைக்கப்பட்டுள்ள இறக்குதுறையும் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.

இதன்முதற்கட்ட பணி பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் 101 நீளமான மற்றும் 31 அடி அகலத்தைக் கொண்ட இறங்குதுறை நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த இறங்குதுறையின் நிர்மாணப்பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மீனவர்கள் தமது வள்ளங்களை பாதுகாப்பாக இங்கு வைத்திருக்க முடியும்.

Related posts: