காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பானது – கெமுனு குற்றச்சாட்டு!
Wednesday, December 28th, 2016
தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற கடந்த 2 ஆம் திகதி நீர்கொழும்பு – கல்கந்த புகையிரத பாதையை மறைத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பாகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்படி, இது தொடர்பாக இன்று(28) தேசிய காவற்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பிரதேச அமைச்சர்கள் சிலரின் ஆதரவாளர்களும் தொடர்புபட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
எரிவாயு கசிந்ததில் விபரீதம் தீப்பற்றி குடும்பஸ்தர் மரணம்! கல்வியங்காட்டில் சம்பவம்!
தீவகத்தில் குவிந்துள்ள அரிய பறவைகள் !
அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நி...
|
|