காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!
Wednesday, November 16th, 2016
காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மருதநகர் வில்சன் வீதியைச் சேர்ந்த மா.விஸ்வநாதன் (வயது-55) என்பவரே உயிரிழந்தவராவார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், 13ஆம் திகதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவரின் நோய்நிலை அதிகரித்திருந்தது. இதனால் அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நோய்நிலை அதிகரித்த போதும் நோயாளியை வைத்தியர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றவில்லை என நோயாளியின் உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Related posts:
அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம் - இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்!
கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!
சனல் 4' முன்வைத்த குற்றச்சாட்டு - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் வழங்கத் தயார் - முன்னாள் ஜ...
|
|
|


