காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!

Wednesday, November 16th, 2016

காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மருதநகர் வில்சன் வீதியைச் சேர்ந்த மா.விஸ்வநாதன் (வயது-55) என்பவரே உயிரிழந்தவராவார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், 13ஆம் திகதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவரின் நோய்நிலை அதிகரித்திருந்தது. இதனால் அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நோய்நிலை அதிகரித்த போதும் நோயாளியை வைத்தியர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றவில்லை என நோயாளியின் உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது.

death165fvr23

Related posts:

ஆரம்ப பிரிவு மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானம் - கல்வி அமைச்சர் தெரி...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை - வடக்கு மாகா...