காணாமற்போன மீனவர் நேற்றுக் கரை திரும்பினர்!
Saturday, December 3rd, 2016
நாடா புயல் காரணமாகக் காணமற்போனதாக அறிவிக்கப்பட்ட நான்கு மீனவர்களும் கரை திரும்பியுள்ளனர் என இடர் முகாமைத்துவ அமைச்சின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு – கிழக்குக் கடற்கரையோரமாகக் கடந்த இரு தினங்களாக நடாடபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு புயல் கரையைக் கடந்தது. பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்கள் காணாமற்போனதாக நேற்று முன்தினம் அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்கள் நேற்றையதினம் கரை திரும்பியுள்ளனர்.
Related posts:
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் , இலங்கை ஆசிரியர் சங்கமும், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும்...
பளையில் விடுதிக்கு சீல் வைப்பு!
தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் இரு புதிய கட்டடங்கள் திறப்பு!
|
|