காச நேய் தாக்கம் :யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 23 பேர் பலி!
Wednesday, January 4th, 2017யாழ் மாவட்டத்தில் காசநோய்த்தாக்கத்தினால் கடந்த வருடம் 23 பேர் மரணமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் மணிவாசகம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு 15 பேரும், 2011ஆம் ஆண்டு 12 பேரும், 2012ஆம் ஆண்டு 21 பேரும், 2013ஆம் ஆண்டு 21 பேரும், 2014ஆம் ஆண்டு 29 பேரும், 2015ஆம் ஆண்டு 27 பேரும் யாழில் காசநோயின் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளனர்.
மேலும், காசநோயின் தாக்கம் கண்டறியப்பட்ட முதல் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான நோயாளர்கள் இறந்துள்ளனர் எனவும் வைத்தியர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
புகைத்தலுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் - ஆறு உற்பத்தி...
நாட்டின் நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும...
|
|