யாழ்.மாவட்டத்திலும் தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது – மாவட்ட செயலகம் தகவல்!
Tuesday, June 29th, 2021யாழ். மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா செயலணி அறிவித்தள்ளது.
அதனடிப்படையில் நேற்று மாலை வரை, யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 87ஆக உயர்ந்துள்ளன.
மேலும், 4 ஆயிரத்து ,616 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 793 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
அத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69, ஜே/71 கிராம அலுவலர் பிரிவுகளும், கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய்ப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள 50 ஆயிரம் தடுப்பூசிகள், நேற்று தொடக்கம், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று, 2 ஆவது டோஸுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் 2ஆவது டோஸ் தடுப்பூசி போடும் பணி, வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|