கல்வி அமைச்சருக்கும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!
Monday, July 19th, 2021இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நாளையதினம் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவெளை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடரும் சீரற்ற காலநிலை: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது - ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!
பொருளாதார நிபுணர்கள் 72 ஆண்டுகளாக நாட்டின் நாணயத்தை அழித்துவருகின்றனர் - பதவி விலகிய லிற்றோ நிறுவன த...
|
|