கட்டுநாயக்கவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானம்!

Tuesday, August 15th, 2017

உலகின் மிகப் பெரிய பயணிகள் போக்குவரத்து விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது என விமானநிலையப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு  சொந்தமான ஏ-380 ரக விமானம் நேற்று தரையிறங்கியதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வருட முற்பகுதியில் விமான நிலையத்தில் ஓடுபாதைகள் திருத்தப்பட்டன. இதன் காரணமாக பாரியளவிலான விமானங்களையும் தரையிறக்கக்கூடிய வசதி கிடைத்துள்ளது. இது இலங்கையின் ஆற்றல்களை உலகிற்கு எடுத்துரைக்க சிறந்த வாய்ப்பாகுமென விமான நிலைய பேச்சாளர் கூறினார்.

Related posts: