கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!
Friday, November 4th, 2022இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தால் நடத்தப்படவுள்ள கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறி தேசிய தொழில் தகைமை மட்டம் 5க்குரியது. 18 மாதங்களைக் கொண்ட இக்கற்கை நெறி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இக்கற்கை நெறியை கற்க விரும்புவோர் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறும் மேலதிக விபரங்களை முதலாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய அலுவலகத்துடன் நேரடியாகவோ அல்லது 071 8349073 மற்றும் 0762939888 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு பெற முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதியின் புதிய செயலாளர் இன்று நியமனம்.
அவசியமான இடங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!
சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை - தமிழரசு மத்திய குழு அதிரடி நடவடிக்கை!
|
|