கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு 12 பதவிகளுக்கான வெற்றிடம்!

Friday, August 10th, 2018

வடக்கு மாகாண கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட பன்னிரெண்டு உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினை செயற்படுவதற்கு உத்தியோகத்தர்களை கோரும் நடவடிக்கையில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் க.சிவனேசன் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியினை கோரி வடமாகாண ஆளுநரின் அனுமதி கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்றும் ஆளுநரின் அனுமதி கிடைத்தவுடன் உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வமாக மாகாண சபையினால் கோரப்படுவர் என்றும் இதில் இரண்டு அதிகாரிகளும் பத்து உத்தியோகத்தர்களும் கோரப்படவுள்ளதாகவும் இதற்காக மீன்பிடி டிப்ளோமா படித்தவர்களே விண்ணப்பிக்க முடியும் என்றும் வடக்கு மாகாண கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவி

Related posts: