பாடசாலை சென்ற மாணவியை காணவில்லை!

Tuesday, July 19th, 2016

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16வயது  மாணவி நேற்று திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைக்கு சென்றுள்ளார்.

குறித்த மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லையென குறித்த மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளளனர். குறித்த மாணவியுடன் கல்வி கற்கும் சக வகுப்பு மாணவிகள் பாடசாலை முடிந்து வீடு வந்து சேர்ந்த போதிலும் மேற்படி மாணவி இது வரை வீடு வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி மாணவி பாடசாலை சீருடையுடன் வீட்டை விட்டு பாடசாலைக்கு செல்வதாக கூறி சென்ற போதிலும் குறித்த  மாணவி பாடசாலைக்கு செல்லவில்லையெனவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: