கடற்படை வீரர்களுக்கு வீரப்பதக்கம்!

Friday, November 11th, 2016

இலங்கை கடற்படை யுத்த வீரர்களின் வீரம் மற்றும் துணிகர செயல்களை பாராட்டி வீர பதக்கம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு கடற்படை தலைமையகத்தில் நேற்று முன்தினம்(9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் 72 கடற்படை யுத்த வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வீர பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

குறித்த நிகழ்வில் கடற்படை அதிகாரி ஒருவருக்கு ரண விக்கிரம பதக்கம் வழங்கப்பட்டதுடன் கடற்படையின் 71 அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்களுக்கும் ரண சுற பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிறிமவன் ரணசிங்க, கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், குறித்த பதக்கங்களை பெற்றுக்கொள்ளும் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Navy_War_Heroes_receive_Gallantry_Medals_20161110_03p1

Related posts: