கடந்த நவம்பரில் மாத்திரம் 567 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்குச் சிகிச்சை!
Thursday, December 8th, 2016
கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 567 பேர் வரை நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தமாக 567 வரையானோர் நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 104 பேருக்கு விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நாய்க் கடிக்கு இலக்கான ஏனையவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நாய்க் கடிக்கு உள்ளாகுபவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
அடுத்த வருடம்முதல் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய பாடத்திட்டம் நடைமுறைக்குவரும் - கல்வி அமைச்...
யாழ். கரவெட்டி பிரதேச சபை முன் பெண் ஒருவர் நீதி கோரிப் போராட்டம்!
அரச சேவையாளர்களின் வேதனம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது – அமைச்ச...
|
|