ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் குப்பைகளை கொட்டுங்கள்!
Thursday, October 6th, 2016
வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் கழிவுகளைக் கொட்டுமாறு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதோஸ் குமார் அறிவித்துள்ளார். கரணவாய் மண்டான் உப்பு வீதியில் கழிவுகள் கொட்டுவதற்காக சுவர் அமைக்கப்பட்டு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு வெளியில் கழிவுகள் கொட்டப்படுவதனால் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதுடன் தொற்று நோய்களும் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகளைக் கொட்டுவோர் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் கழிவுகளைக் கொட்டுமாறும் வீடுகளில் சேரும் கழிவுகளை பைகளில் இட்டு கழிவகற்றும் வாகனம் வரும் பாதையில் வைப்பதன் மூலம் அக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
Related posts:
நீரோடையில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த ஒருவர் கைது!
திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய பரிந்துரைகள் -சுகாதார அமைச்சு!
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...
|
|