எவரும் எனக்கு அங்கீகாரத்தை பெற்று தரவில்லை – சுசந்திகா!

Thursday, August 4th, 2016

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இலங்கையர் தான் என்பதுடன், முதல் பெண் எனவும் அவர் கூறியுள்ளார். எனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கங்களும் பெற்று தரவில்லை.

எனது இரண்டு பிள்ளைகளை வளர்க்க நான் தனியாக கஷ்டப்படும் போது. மற்றவர்களுக்கு என்னால் எப்படி உதவ முடியும்?. எனக்குள்ள அனுபவத்தையும் அறிவையும் அடுத்த தலைமுறைக்கு பெற்றுக்கொடுக்க எனக்கு எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை.

ஒரு பிள்ளை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாலும் அந்த பிள்ளையின் வெற்றிக்கு அதிகாரிகள் எந்த பெறுமதியையும் பெற்றுக்கொடுக்க மாட்டார்கள் எனவும் சுசந்திகா ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: