எரிபொருள் நுகர்வோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Sunday, June 12th, 2022எதிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் கைத்தொழில்துறைகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் ரேஷன் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அனைத்து எரிபொருள் பாவனையாளர்களையும் தமது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான டீசல் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள ஒவ்வொரு எரிபொருள் களஞ்சியசாலைக்கும் தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் வேலணை பிரதேசத்தில் வீதி மின்சார விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்!
வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - 8 கொரோனா மரணங்களும் பதிவு!
எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம் - மன்னாரில் சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு!
|
|