எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் கட்டாயம்! யாழ்.மாவட்டச் செயலர் வேதநாயகன் அறிவிப்பு!

Wednesday, November 14th, 2018

யாழ் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு இடையில் கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையில் பல தகராறுகள் மனக் கசப்புக்கள் ஏற்படுகின்றன. கட்டண மீற்றர் பொருத்துவதன் மூலம் பயணிகளுக்கும் சாரதிக்கும் இடையிலான நம்பகத் தன்மை அதிகரிக்கும்.

2016  ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர்களைப் பொருத்துவதற்கு மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுத்த போது மாகாண போக்குவரத்து நியதிச் சட்டத்தின் பிரகாரம் குறித்த விடயம் மாகாண சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் என மாகாண சபை மாவட்டச் செயலருக்கு எழுத்தில் கடிதம் அனுப்பியதன் பெயரில் குறித்த பணிக்கான முன்னெடுப்புகளை மாவட்டச் செயலர் கைவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: