ஊர்காவற்துறை சிறுமி தொடர்பில் விசாரணை!

Monday, August 15th, 2016

ஊர்காவற்துறையில் காணாமற்போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 வயதான குறித்த சிறுமியின் சடலம் அவருடைய வீட்டிருந்து 400 மீற்றர் தொலைவிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து நேற்று (14) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி காணாமற்போனதாக நேற்று முன்தினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts:

நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து விசேட நடவடிக்கை - இராஜாங்க அமைச்ச...
அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதி வழங்க நிபந்தனையுடன் திறைசேரி செயலாளருக்கு அதிகா...
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...