உலகின் பெறுமதி மிக்க கோப்பி இனம் நுவரேலியாவில்!
Monday, March 13th, 2017உலக சந்தையில் அதிக விலையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்றுமதி பயிர்செய்கை இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இவ்வாறான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் 15000 கோப்பி கன்றுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக விலைக்கு வழங்கப்படும் எரபிக்க எனப்படும் கோப்பியை கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்திலுள்ள நுவரெலியாவில் வளர்க்க முடியும். நுவரெலியா மாவட்டமே அதற்கு பொருத்தமான இடமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் அதனை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடு முழுவதும் கோப்பி பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு 30 இலட்சம் கோப்பி கன்றுகள் அவசியமாக உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை!
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை - சிறுமி பலி – ஒருலட்சத்திற்குட் அதிகமானோர் பாதிப்பு!
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
|
|