உரும்பிராயில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறந்து வைப்பு!

Tuesday, June 7th, 2016

யாழ் .உரும்பிராயில் நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05.06.2016) காலை 9.30 மணிக்குச்  சிறப்புற இடம்பெற்றது.  உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலயப் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் சி. நந்தகுமார் தலைமை தாங்கினார்.

மண்டப நிர்மாணத்துக்குப்  பெருமளவு  நிதிப்பங்களிப்பை வழங்கிய இலண்டனைச் சேர்ந்த கு. விவேகானந்தன் தம்பதியர் மண்டபத்தைச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன், வடமாகாண ஆளுநரின் செயலர் இ. இளங்கோவன், கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு வண. தியாக கிருஷ்ணமூர்த்திக் குருக்கள், யாழ். சின்மயமிஷன் முதல்வர் வண. ஜாக்கிரத் சைதன்ய சுவாமிகள்  ஆசியுரைகளை வழங்கினர்.

மண்டப அமைப்புப் பணிகளில் பங்கேற்ற கலைஞர்கள் விருதுகள் கெளரவிக்கப்பட்டதுடன் , சிறப்பு நிகழ்வாக புகழ்பூத்த பஞ்சமூர்த்தி குமரன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி இடம்பெற்றது.

கற்பக விநாயகர் ஆலய வடக்கு வீதியில் குறித்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts: