உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு!

Monday, February 4th, 2019

திருகோணமலையில் அண்மையில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதன்மூலம் நஷ்டத்தை எதிர்நோக்கி வந்த பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, உரிய அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் ஏற்பட்ட நோய் தாக்கம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின், மூதூர், கிண்ணியா, தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் இறந்துள்ளன.

இதனால், அதன் மூலம் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தியவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts: