உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை!
Monday, January 2nd, 2017வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே தீயினால் முற்றாக எரிந்துள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகவும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சனசமூக நிலையத்திலிருந்த சுமார் 100 புத்தகங்களும் தளபாடங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Related posts:
முதியோர் பராமரிப்புக்கு நடவடிக்கை!
கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு!
யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் கைது!
|
|