இலத்திரனியல் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

வெளிநாடுகளின் குழுக்கள், உள்ளூர்வாசிகளின் கடன் அட்டைகள் மற்றும் செலவு அட்டைகளின் பணத்தை திருடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பணக்கொடுக்கல் வாங்கல்களில் அட்டைகளை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு தன்னியக்க இயந்திரங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் உள்ள அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற முயற்சியை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஏடிஎம் அட்டைகளுக்கு சமனான மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் அட்டையில் பணத்திருட்டு தொடர்பில் ஏற்கனவே இரண்டு சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பின் நான்கு வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் விதை நெல்லுக்கு பற்றாக்குறை ஏற்படும் - வடக்கு பிரதி விவசாயப் பணிப்பாளர்!
வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும் – புத்தாண்டு வ...
இந்தியா - காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் ஆரம்பம் - ஜனாதிபதியின் வழங்கிய ...
|
|