இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவிப்பு!

Friday, May 6th, 2022

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராபஜக்ஷவின் கையொப்பத்துடன், தமிழக முதல்வருக்கு நேற்றையதினம் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில், தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தை குறித்து நிற்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, அண்டை நாட்டு பிரச்சினையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: