இலங்கையில் போதை பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது – மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் !
Sunday, August 30th, 2020
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்து 5 இலட்சம் பேரில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்திற்காக அதிகளவான பணப்பரிமாற்றம் தொலைபேசியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீடுகள், கோடிப்புறங்களில் 1500 வைரஸ்: புதிய ஆய்வில் தகவல்!
உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!
இலங்கையில் வருடாந்தம் 10 ஆயிரம் காசநோயாளிகள் கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
|
|
|


