இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளனர் – Learn Asia நிறுவகம் நடத்திய ஆய்வில் தகவல்!
Sunday, June 11th, 2023கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக Learn Asia நிறுவகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மொத்த வறியவர்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களில் 81 சதவீதம் பேர் கிராமப்புற மக்கள் என்றும், 2019 முதல், கிராமப்புற வறுமை 15 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், 2019 இல் 6 சதவீதமாக இருந்த நகர்ப்புற வறுமை மூன்று மடங்காக உயர்வடைந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன், பெருந்தோட்ட சமூகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பால...
சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!
அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
|
|
வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
பலத்த பாதுகாப்புடன் கூடியது நாடாளுமன்றம் – நாட்டின் நிலைமைகள் குறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள்!
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் - கல்வி அமைச்சு அ...