இலங்கைக்கு வந்துள்ள சீனாவின் ஆய்வுக் கப்பல்!
Friday, February 3rd, 2017சீன கடற்படையின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ‘க்யோன் சன்ஹின்ங்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடைந்துள்ளது.’க்யோன் சன்ஹின்ங்’ கப்பல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் என கூறப்படுகின்றது.
எரிபொருள் தேவை மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்காக நேற்று இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.
இதேவேளை கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினென்ட் கமாண்டர் யங் ஹெய்டொ மேற்கு கடற்படைக் கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகலவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி சபை கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் மும்முரம்!
தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன - யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவி...
இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக...
|
|