இருவர் இடைநீக்கம்
Wednesday, June 1st, 2016
அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் சேவையாற்றுகின்ற அனுஷ பெல்பிட மற்றும் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க ஆகிய இருவரும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விருவரையும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு, அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை கூடிய விசேட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அரச சேவைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம், அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாணத்தை உலுக்கும் வாள்வெட்டுக் கும்பல்: இதுவரை 81 பேர் கைது 75 பேருக்குப் பிணை!
வட்டுக்கோட்டையில் வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று!
விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் - அரச ஊழியர்களுக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு !
|
|
|


