இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர கூட்டம்!
Tuesday, May 24th, 2016இயற்கை அனர்த்தப் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடும் வகையில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 14ம் விதியின் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.நாளை பிற்பகல் ஒரு மணியளவில் கூடவுள்ள நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தின் போது வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
“ஆவா” க்கு போட்டியாக “தாரா” !
பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை - வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப...
|
|