இந்திய மீனவர்கள் 31 பேர் உண்ணாவிரதம்!

Tuesday, February 14th, 2017

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிக்க வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 31 இந்திய மீனவர்கள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களையும் தங்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுகின்றனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

fishman 56564656

Related posts: