இந்திய மீனவர்கள் மூவர் கைது!

Thursday, March 24th, 2016

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த

குற்றச்சாட்டில், நேற்று (23) இரவு 3 இந்திய மீனவர்களை

காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்

கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து

விசைப்படகொன்றில் வந்த குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு

அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே

கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: