இந்திய மீனவர்கள் மூவர் கைது!
Thursday, March 24th, 2016இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த
குற்றச்சாட்டில், நேற்று (23) இரவு 3 இந்திய மீனவர்களை
காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்
கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து
விசைப்படகொன்றில் வந்த குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு
அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே
கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
முடிவுக்கு வருமா சைட்டம் பிரச்சினை !
வடக்கு உள்ளுராட்சி உதவியாளர்களுக்கான பதவி உயர்வு அடுத்தவாரம்!
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அட்டூழியம்!
|
|