இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை கடற்படை தளபதி சந்திப்பு!
Wednesday, November 1st, 2017
இலங்கைக்கான இந்தியர் உயர்ஸ்தானிகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ் எஸ் ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது இலங்கையின் 22 வது கடற்படை தளபதியாக நியமிகக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ் எஸ் ரணசிங்கவிற்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் இருவரும் இரு தரப்பு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன
Related posts:
இலங்கையிலும் கொரோனா தொற்றின் உயிரிழப்பு 200 ஐ கடந்தது -
நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி - சுகாதார அமைச்சின் தொற்று நோ...
நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் - அமைச்சர் பிரசன...
|
|
|


