இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி பிரதிநிதிகள் – இராணுவ தளபதி சந்திப்பு!

Thursday, August 29th, 2019

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவினர்கள் ஆகஸ்ட் மாதம் (25 – 29) ஆம் திகதி வரை இடம்பெறும் மூலோபாய கல்வி சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ளனர்.

இந்த பிரதிநிதிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இம் மாதம் (26) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவ தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் மற்றும் பிரிகேடியர் நவ்பிரீட் சிங் அளங் ஆகியோரை இலங்கை இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா வரவேற்று இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற இந்த இந்திய உயரதிகாரிகள் இராணுவ தளபதியை சந்தித்து நல்லுறவு கலந்துரையாடலை மேற்கொண்டனர். இறுதியில் இராணுவ தளபதி மற்றும் இந்திய உயரதிகாரிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.

இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூராஜ் பங்ஷஜயா இனால் இலங்கை இராணுவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த உயரதிகாரி குழுவினருக்கு இலங்கை இராணுவத்தின் தற்போதைய பாத்திரங்கள் மற்றும் பணிகளை விளக்கினார். பின்னர் இந்த இந்திய உயரதிகாரிகள் குழுவினர்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய சமாதான படையணி நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களை நினைவு படுத்தி தங்களது கௌரவ அஞ்சலிகளை செலுத்தினர்.

Related posts: