இந்தியப் பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது!

Friday, November 25th, 2016

சுற்றுலா விசாவில் இந்தியாவிலிருந்து யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜையொருவர் யாழ். குருநகர் பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை(24) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து 43 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடமிருந்து ஒரு தொகை துணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

arrest_07

Related posts:


சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப...
உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ...
இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை - நடைமுறைச் சிக்கல்களால்முடியாத காரியம் என தேர்தல்...