ASP இன் பணித் தடை நீக்கம்!
Monday, August 8th, 2016
எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ.டபிள்யூ.சமிந்த தர்மரத்னவுக்கு விதிக்கப்பட்டிந்த பணித் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதவி உயர்வுகளோ, பதவி நிலையோ பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கைகலப்பில், சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுமார் 4 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமிந்த தர்மரத்ன, 20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில், விடுவிக்கப்பட்டிருந்தார்.
Related posts:
படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது : நெற் செய்கையையும் இது பாதிக்கலாம்!
கொரோனா தாக்கம் தொடருமானால் தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது - சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாச...
மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் - ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்...
|
|