பொலிஸாருக்கு கஞ்சா விற்ற நபர் கைது!

Saturday, August 13th, 2016

சிவிலுடையில் சென்ற பொலிஸாருக்கு கஞ்சாவை விற்பனை செய்த 39 வயதுடைய நபரைக் கடந்த புதன்கிழமை(10) இரவு யாழ். நிலாவரைப் பகுதியில் வைத்து அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் ஊரெழு மேற்குச் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரிடமிருந்து 115 கிராம் கஞ்சாவினைத் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: