ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு!
Saturday, May 6th, 2017ஆசிரிய உதவியாளா்களின் மாதாந்த கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்று நிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டி ஆராச்சி கையொப்பமிட்ட சுற்று நிரூபங்கள் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 6 ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்டுவந்த ஆசிரிய உதவியாளர்களுக்காக கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதமுதல் நிலுவையுடன் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
சாரதியின் கவனயீனத்தால் வந்தது வினை: மதிலுடன் மோதியதில் பலத்த சேதங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி
எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கும்!
மக்கள் மீது எவ்வித வரிச் சுமைகளையும் ஏற்றாது, நாட்டின் வருமானத்தை 50 வீதமாக அதிகரிக்க முடியும் - நாட...
|
|