ஆசிய அபிவிருத்தி வங்கி பங்குச் சந்தையில் முதலீடு!
Sunday, November 27th, 2016நாட்டின் பங்குச் சந்தையின் மேம்பாட்டிற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சார்பாக நிதியமைச்சின் செயலாளரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக இலங்கைக்கான வதிவிட தூதுவர் குழுவின் பணிப்பாளரும் நிதி முதலீடு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்கல் நிதியத்திலிருந்து குறித்த நிதியை வழங்கவுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பங்குச்சந்தையை நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் திறம்பட செயற்படுத்துவதே குறித்த பங்குச்சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது
Related posts:
டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவர்களால் யாழ் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு ...
15, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!
|
|