அர்ஜூன மகேந்திரனை பதவியிலிருந்து நீக்க கோரி மேல் நீதிமன்றத்தில் மனு !
Tuesday, June 21st, 2016இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஊழல் எதிர்ப்பு முன்னணி தலைமையிலான சிவில் அமைப்பினர் நேற்று (20)மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதன்பிரகாரம் நேற்று நண்பகல் குறித்த வழக்கு தாக்கல செய்யப்பட்டது. இது குறித்தான மனுவினை ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்ப்பாக ரன்ஜித் கீர்த்தி தென்னகோன் மனுவை தாக்கல் செய்தார்.
இதன்போது ரன்ஜித் கீர்த்தி தென்னகோன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையைில்
இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுறுகின்றது. இவர் தனது பதவிக்காலத்தின் போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். ஆகையால் இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனாலும் இவரை பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான நிலைப்பாடாக உள்ளது. எனினும் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்குள் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கின்றது.
எனவே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை உடனடியாக பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தரவை நீதிமன்ற பிறப்பிக்க வேண்டும். இதன்படியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது என்றார்.
Related posts:
|
|