அம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிள் சில்லு சறுக்கி விழுந்ததில் முதியவர் படுகாயம் 

Friday, August 4th, 2017

அம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடுவதற்கு முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிள் சில்லு சறுக்கி விழுந்ததில் முதியவரொருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(04) காலை சாவகச்சேரி நகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சரசாலை வடக்கைச் சேர்ந்த பேரம்பலம் கந்தசாமி(வயது- 65) என்பவரே படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: