அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு இவ்வாரம் இறுதி தீர்மானம்!
Wednesday, February 8th, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு, இந்த வாரம் இறுதி செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தவாரம் அமைச்சரவையில் இந்த திட்டத்தை சமர்ப்பித்து, இந்த உடன்பாட்டை இறுதிப்படு த்தவுள்ளார். அமைச்சரவை இன்று கூடும் போது, இதுபற்றிக் கலந்துரையாடப்படவுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்த உடன்பாடு இறுதிப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் மற்றும் கைத்தொழில் வலயத் திட்டம் என்பனவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களினால், இந்த உடன்பாடு தாமதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
இணையவழி கற்கை தொடர்பில் பெற்றோர் கவலை!
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொ...
|
|