அமைச்சர் ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிக்க நடவடிக்கை!

Thursday, May 16th, 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை இன்றையதினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்க உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவை வழங்குவது தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்காக, பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு சபையிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு யோசனைகளை முன்வைத்துள்ளது. அந்த யோசனைகள் அடங்கிய ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: