அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!
Wednesday, May 27th, 2020
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிடுகையில் –
நேற்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை நம்ப முடியவில்லை.” இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் சமூகத்தினதும் இலங்கையினதும் மதிப்புக்குரிய தலைவர். அவரது இழப்பு பேரிழப்பாகும்.
அவரது ஆத்மா சாந்திக்காகவும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பினை அவரது குடும்பத்தினர் தாங்குவதற்கான பலத்துக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.“ என இந்திய உயர்ஸ் தானிகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று மாலை இந்திய உயர் ஸ்தானிகர் மறைந்த அமைச்சர் ஆறுமகன் தொண்டமானை சந்தித்து எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரணகம ஆணைக்குழு விசாரணை இன்று கிளிநொச்சியில்
எதிர்கால நல்கருதி நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்- நிதி அமைச்சர்!
கீரிமலை வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!
|
|
|


