செரமிக் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, March 24th, 2021

இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள செரமிக் உற்பத்தி பொருட்களை 6 மாத கடன் அவகாச காலத்திற்கு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பற்றிக் மற்றும் கைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தவிர்ந்த சேலை வகைகளை 90 நாட்கள் கடன் அவகாச காலத்திற்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Related posts: