அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த வடமாகாண ஆளுநர்!
Thursday, October 5th, 2017
யாழ். தென்மராட்சி தெற்குப் பிரதேசத் தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று வியாழக்கிழமை (05) நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
குறித்த பகுதிகளில் காணப்படும் விவசாயக் குளங்கள், வாய்க்கால்கள், மற்றும் கிணறுகள் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைதடி நாவற்குழி தெற்கு கோவிலாக்கண்டிக் குளம், கைதடி நாவற்குழி கிராய்குளம், மறவன்புலோ கிழக்கு சவரியன் குண்டுக் குளம் அதனோடு இணைந்த வாய்க்கால்கள், செம்மன் குண்டுக் குளம், மறவன்புலோ வடக்கு திரிவிராய்குளம், சின்னத்தூவில் குளம், சட்டநாதர் ஐயா கிணறு உள்ளிட்டவை புனரமைப்புச் செய்வதற்காகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழை காலம் நெருங்குவதன் காரணமாக மேற்படி குளங்கள் மற்றும் வாய்கால்களை புனரமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், குறித்த பிரதேச கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கடந்தவாரம் வடமாகாண ஆளுநர் சந்தித்துக் கலந்துரையாடிய போது அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் குறித்த பிரதேசங்களுக்குச் இன்று சென்றுள்ளதுடன் நேரடிக் கள ஆய்வும் மேற்கொண்டுள்ளார்.
Related posts:
'கபாலி' திரைப்படத்தால் 225 இணைய தளங்கள் முடக்கம்!
கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது வாள் வெட்டு – கோண்டாவிலில் சம்பவம்!
வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை - இராஜாங்க...
|
|
|


